யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (30) அதிகாலை மதுரங்குளி – கரிகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பஸ் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.