நாட்டில் எரிபொருள் பிரச்சனையை நிவர்த்தி செய்துகொள்ள எரி சக்தி அமைச்சியினால் வாகன இறுதி இலக்கியத்தில் அடிப்படையில் நேற்று முதல் எரிபொருள் வினியோக நடவடிக்கைகள் நாடு முழுவதும் இடம்பெறுகிறது.

இதனிடையே சில தொழில்துறை எரிபொருள் பிரச்சினையினால் கடுமையாக பாதிக்கப்ட்டுள்ளனர்.
குறிப்பாக “அகழ்வு ” பணியில் ஈடுபடுத்தப்படும் கணரகவாகனங்கள் ( சங்கிலியில் இயங்கும் டோசர்) போன்ற எஞ்சின் இயந்திரங்கள் இயக்குவதற்கான எரிபொருள் கிடைக்காத நிலையில் பஸ்சறை பகுதியை சேர்ந்த மணிக்கல் அகழ்வில் ஈடுப்பட்டு வரும் உரிமையாளர்,மற்றும் தொழிலாளர்கள் என இந்த துறைச்சார்ந்த அனைவரும் பதிக்கபட்டுள்ளனர்.

அத்தியாவசிய சேவைகளிளும் இணைத்துக்கொள்ளப்படாத மாணிக்கல் அகழ்வில் ஈடடுப்டும் எஞ்சின் இயந்திரங்கள் தங்களுக்கான எரிபொருள் கிடைக்காத நிலையில் தொழில் முடங்கி இருக்கிறதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக ஒரு தடவை எரிபொருள் நிரப்பிக்கொள்ள பிரதான பாதைகளில் இந்த எஞ்சின் கணரக இயந்திரங்களை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டுவர இயலாது.
எஞ்சின் இயந்திரங்கள் கொண்டுவர பாரிய வாகனங்களில் ஏற்றியே எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டுவர வேண்டும் .
இதற்கு டீசல் இல்லாத நிலையில் இவர்கள் சிரமத்தில் காணபடுகின்றனர்
இருப்பினும் வாக இறுதி இலக்கியத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்கபடுவதனால் பஸ்சறை பகுதியில் மாணிக்கல் அகழ்வில் ஈடுப்படும் தொழிலாளர்களின் தொழில் பாதிக்கபட்டுள்ளது.
ராமு தனராஜா
