எரிவாயு மாஃபியா ஒன்று செயற்படுவதாக வெளியான தகவல் குறித்து சுயாதீன விசாரணையொன்றை நடத்துமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அனில் கொஸ்வத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
கடிதமொன்றின் ஊடாக நிதி அமைச்சிடம் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டில் எரிவாயு மாஃபியா ஒன்று செயற்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தற்போதைய தலைவர் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.