ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் விழுந்து பலி – சாமிமலையில் சோகம்!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, டீசைட் தோட்டத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்று வீட்டின் அருகாமையிலுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது. இத்துயர் சம்பவம் இன்று (9) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பிரசாத் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள சுமார் மூன்றடி ஆழமான கிணற்றில் குழந்தை விழுந்து கிடப்பதை கண்ட, குழந்தையின் தாத்தா கூச்சலிட்டதை தொடர்ந்து வீட்டிலுள்ளவர்கள் ஓடி வந்து குழந்தையை மீட்டெடுத்து 1990 க்கு அழைப்பு ஏற்படுத்திவிட்டு ஆட்டோ மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தையின் உயிர் பிரிந்தது விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் பிரேத ப‌ரிசோதனை‌க்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இத்துயர் சம்பவத்தால் தோட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது. எவரும் வேலைக்கு செல்லவில்லை.

இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

(சாமிமலை ஞானராஜ் )

Related Articles

Latest Articles