‘இணையவழி மது விற்பனைக்கு அனுமதி மறுப்பு’

இணையம் ஊடாக மதுபானங்களை விற்பனை செய்வதற்கு கொவிட்  -19 தடுப்புக்கான செயலணி அனுமதி மறுத்துள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்தி சில்வா தெரிவித்தார்.

பயணக்கட்டுப்பாட்டால் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இணையம் ஊடாக மது விற்பனை செய்வதற்கு கலால் திணைக்களம் திட்டமிட்டது. இதற்கு நிதி அமைச்சும் கொள்கை ரீதியில் அனுமதி வழங்கியது.

எனினும், இத்திட்டத்துக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட பல தரப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.  இதனையடுத்து கொவிட் தடுப்புக்கான செயலணி அனுமதி வழங்கினால் மட்டுமே குறித்த சேவை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், அதற்கான அனுமதியை வழங்க குறித்த செயலணி மறுத்துள்ளது.

 

Related Articles

Latest Articles