ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் தமிழர்களுக்கும் இடம்! ஜனாதிபதி உறுதி வழங்கினார் : செந்தில் தொண்டமான்

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் தமிழ்ப் பிரதிநியொருவரும் உள்ளடக்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த இணக்கத்தை வெளியிட்டுள்ளதாக செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் தமிழர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்பது குறித்து ஜனாதிபதியுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், தமிழர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஜனாதிபதி, குறித்த செயலணியில் தமிழர் மூவரையும் உள்ளடக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles