ஓல்டன் தோட்ட தொழிலாளர்களுக்கு மறியல் நீடிப்பு!

மஸ்கெலியா சாமிமலை ஓல்டன் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 25 நாட்களுக்கு மேலாக தங்களது உரிமையை வலியுறுத்தி கோரிக்கைகளை முன்வைத்து மனம் தளராது போராடி வருகின்றனர்.

தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு தொடர்பாக கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கடந்த மாதம் 5ம் திகதி நாடாளவீய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டத்திற்கு இ.தொ.கா அழைப்பு விடுத்திருந்தது.

அதேநேரத்தில் ஓல்டன் தோட்டத்தில் தோட்ட நிர்வாக அதிகாரிகள் தொழிற்சாலையில் பொதி செய்யப்பட்டிருந்த தேயிலை தூளை ஏற்று செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.

இதனை தடுத்த தொழிலாளர்களின் இருவர் தோட்ட அதிகாரியால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தாக்குதலை எதிர்த்து ஓல்டன் தோட்டத்திற்கு உரிய நான்கு  பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தோட்ட தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 8 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் 7 பேர் பெண்கள் எனவும், ஒருவர் ஆண் எனவும் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் மஸ்கெலியா பொலிஸாரால் அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட இவர்கள் 14 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின் இன்று (03.03.2021) அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

அதேநேரத்தில் இவர்களை மீண்டும் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி அட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ஓல்டன் தோட்டத்தில் இடம்பெற்ற தோட்ட அதிகாரிக்கு எதிரான தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு அதில் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், மூவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

அதேநேரத்தில் இது தொடர்பில் இன்று (03.03.2021) நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர்களை வினவிய போது,

தமக்கு நீதி வேண்டும் எனவும், இந்த தாக்குதல் சம்பவம் தோட்ட அதிகாரியால் ஆரம்பிக்கப்பட்டதால் அவரை முதலில் கைது செய்யும்படி வலியுறுத்துவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

க.கிசாந்தன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles