கடும் காற்று, அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் மத்திய மாகாணத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 345 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடும் காற்று, மண்சரிவால் 80 வீடுகள் பகுதியளவு தேமடைந்துள்ளன என்றும், இரு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளை, அடை மழையால் நுவரெலியா மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.