தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜை, அம்முன்னணி அதிகாரப்பூர்வமாக வெளியேற்றியுள்ள நிலையில், திலகர் அணி உறுப்பினர்கள் சிலரும் தாமாகவே வெளியேறிவருகின்றனர்.
எதிர்காலத்திலும் எப்படியும் கட்சியிலிருந்து நீக்கப்படுவோம் என்பதை அறிந்துவைத்துள்ள அவர்கள், தாமாகவே இராஜினாமாக் கடிதங்களைக் கையளித்து வெளியேறுவதை காணமுடிகின்றது.
அதேவேளை, தொழிலாளர் தேசிய முன்னணியில் இருந்துகொண்டு, இரட்டை நிலைப்பாட்டில் அரசியல் நடத்தும் உறுப்பினர்கள் சிலரை நீக்குவதற்கும் கட்சி தலைவர் திகாம்பரம் திட்டமிட்டுள்ளார் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான பெயர் பட்டியல் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.