கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிலும் இன்று (15) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலுக்குவந்துள்ளது. மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு ஊரடங்கு அமுலில் இருந்தாலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வலயத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நிறுவன அடையாள அட்டையை, ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் ஏற்கனவே 18 பொலிஸ் பிரிவுகளில் அமுலில் உள்ள ஊரடங்கு தொடர்கின்றது. ஊரடங்கு உத்தரவைமீறிய 142 பேர் இதுவரை கைது செய்துள்ளனர்.