கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் நாளை (15) காலை 5 மணி முதல் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த பிரதேசத்தில் உள்ள சுதந்திர வர்த்தக வலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ஊரடங்க அனுமதிப் பத்திரமாக தமது அலுவலக அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம் என்று இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் ஏற்கனவே 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்க அமுலில் உள்ள நிலையில் அது தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles