கிளிநொச்சி, வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் அமைந்திருந்த காட்டுப் பகுதிக்கருகில் புதைய தோண்ட முற்பட்ட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாயவனூர் காட்டுப் பகுதியில் நவீன ஸ்கானிங் இயந்திரத்துடன் மாத்தளை, கண்டி மற்றும் கொழும்பு பிரதேசங்களிலிருந்து வருகை வருகை தந்திருந்த ஐவர் நேற்று புதையல் தோண்டுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் தகவல் இராணுவப்
புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்துள்ளது.
இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பூஜை
வழிபாடுகளுக்காக அழைத்து வரப்பட்ட முதியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர்களிடமிருந்த புதையல் தோண்டுவதற்காக
பயன்படுத்தப்படும் நவீன ஸ்கானிங் கருவி மற்றும் ஏனைய பொருட்கள், அவர்கள் பயணித்த வாகனம் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். கைதானவர்கள் இன்று(30) கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ஐவரையும் வருகின்ற ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.