கருணா, பிள்ளையானுக்கு அரசியலில் பதவிகள் வழங்கப்பட்டமை தவறு!

” புலிகள் அமைப்பில் இருந்தபோது குற்றம் இழைத்த கருணா, பிள்ளையான் போன்றவர்களுக்கு அரசியலில் பதவிகள் வழங்கப்பட்டமை தவறான முடிவாகும்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் பிள்ளையானை தொடர்புபடுத்துவதற்கு முற்படுகின்றனர் என வெளியாகும் தகவல் தொடர்பில் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன கூறியவை வருமாறு,

”  அது பற்றி எனக்கு எதுவும் கூறமுடியாது. விசாரணைகளை முன்னெடுக்கும் சிஐடியினர் மற்றும் புலனாய்வு பிரிவுக்கே அது பற்றி தெரிந்திருக்ககூடும். எனக்கு இது பற்றி தகவல்கள் தெரியவரவில்லை.

பிள்ளையான் புலிகள் அமைப்பில் இருந்தவர். அவ்வமைப்பில் இருந்து அவர் வெளியேறி அரசாங்கத்துடன் இணைந்தபோது நான் அமைச்சு பதவி வழங்கவில்லை. அப்படிபட்ட ஒருவருக்கு எப்படி பதவி வழங்கப்பட்டது என வழங்கியவரிடம் கேளுங்கள்.

அவ்வாறு பதவி வழங்கப்பட்டமை தவறாகும்.
புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி கருணாவும், பிள்ளையானும் இராணுவத்துடன் இணைந்தனர். போரை முடிப்பதற்கு இது உதவியாக அமைந்திருக்கக்கூடும்.

அம்பாறையில் பிக்குகளை கொலை செய்தது யார்? இது அனைவருக்கும் தெரியும். எனவே, நபர்கள் யார் என்ற தகவலை எனது வாயில் இருந்து எடுக்க முற்படவேண்டும். புலிகள் அமைப்பில் இருந்தபோது கருணா, பிள்ளையான் மக்களை கொன்று குற்றம் இழைத்தனர்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles