கர்ப்பிணி பெண் உட்பட 18 பேர் குளவிக்கொட்டால் பாதிப்பு!

மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்ட எமில்டன் பிரிவில் கர்ப்பிணி பெண்ணொருவர் உட்பட 18 தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த 13 பெண்களும், ஐந்து ஆண்களுமே இன்று முற்பகல் இவ்வாறு குளவிக்கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து மஸ்கெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

நமது நிருபர்கள் – கௌசி, செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles