டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்த தாதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த தாதியொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது எனவும், அவர் அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளார் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் 07 இலக்க விடுதியில் (வார்ட்டில்) சிகிச்சைப்பெற்று வந்த பெண் ஒருவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் என 15 பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் தாதியொருவருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.