குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்ற பேராயர்

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தேவாலய ஊழியரை சந்திப்பதற்கான பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு விஜயம் செய்தார்.

சந்தேகநபரின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பேராயர் இன்று (04) இந்த விஜயத்தை மேற்கொண்டார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்த்து சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டிருந்தார்.

Related Articles

Latest Articles