மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலய மாணவர்கள் 15 பேர் இன்று மதியம் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பும் வழியிலேயே இவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
சம்பவத்தின் பின்னர் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நான்கு மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
