லிந்துலை, சென்கூம்ஸ் தோட்டத்தில் நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகிய ஒருவர் பலியாகியுள்ளார்.
தொழில் முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியிலேயேஅவர் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சென்கூம்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 67 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.










