சாமிமலை, ஸ்டோகஹோம் தோட்டத்தில் பெண் தொழிலாளியொருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த வேளையிலேயே, தேயிலை செடியின் கீழ் பகுதியில் கட்டியிருந்த குளவிக்கூடி கலைந்து அவரை சரமாரியாக கொட்டியுள்ளன.
65 வயதுடைய பெண்ணே பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்
