குளவிக் கொட்டு: ஐந்து தொழிலாளர்கள் பாதிப்பு!

குளவிக்கொட்டுக்கு இலக்கான ஐவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா, புரவுன்லோ தோட்ட பிரிவில் தொழில் செய்து கொண்டிருந்த ஐந்து ஆண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

31 மற்றும் 55 வயதுக்கிடைப்பட்ட தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா நிருபர்

Related Articles

Latest Articles