உலக சிறுவர் தினம் 2020ஐ முன்னிட்டு 21 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் (RPC’s) உறுப்பினர்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் 35 குழந்தைகள் மேம்பாட்டு நிலையங்களை (CDC’s) அமைப்பதற்கான உறுதிமொழியை பெருந்தோட்ட துரைமார் சங்கம் அளித்துள்ளது. இதன்படி, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களிலுள்ள மொத்த குழந்தைகள் மேம்பாட்டு நிலையங்களின் எண்ணிக்கை 258ஆக அதிகரிக்கும். இந்த நிலையங்களை அமைப்பதற்கு பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்தின் முத்தரப்பு அமைப்பான பெருந்தோட்ட மனித மேம்பாட்டு அறக்கட்டளை (PHDT) மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆரம்பத்தில் குழந்தைகளுக்கான பராமரிப்பு நிலையங்களை 2015ஆம் ஆண்டில் மாத்திரமே ஆரம்பிக்கப்பட்டபோதிலும், தற்போது இதுபோன்ற 223 நிலையங்களில் 30,000க்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர். இங்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களால் இவர்கள் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள், இவர்கள் அனைவரும் குழந்தை பருவ வளர்ச்சி குறித்து டிப்ளோமா தகைமை பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“எமது கண்ணோட்டம் என்னவென்றால், எந்தவொரு குழந்தையும் ஒதுக்கப்படுவதில்லை, எங்களது தோட்டங்களில் குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சிக்காக நாங்கள் மேற்கொண்டுள்ள அனைத்து முதலீடுகளினால் குழந்தைகள் சிறப்பாக வளரவும், அவர்களது பெற்றோரிடம் கிடைக்காத அரவணைப்பையும் நாம் வழங்குகின்றோம்.” என பெருந்தோட்ட துரைமார் சங்கத்தின் தலைவர் பாத்திய புலுமுல்ல தெரிவித்துள்ளார்.
“அர்ப்பணிப்புள்ள எமது அதிகாரிகளின் மிகச்சிறந்த முயற்சிகள் மூலம் எமது மேம்பட்ட குழந்தை பராமரிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள், ஆரம்பத்தில் பாதுகாப்பு கட்டமைப்பிலிருந்து பெரும் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் தாராளமான முதலீடுகளால் ஆதரிக்கப்படும் எமது தோட்டங்களில் குழந்தை மேம்பாடு மற்றும் பாதுகாப்பு எவ்வளவு தூரம் முன்னோக்கி வந்துள்ளது என்பதற்கு இதுவொரு சான்றாகும். எமது இளம் பிள்ளைகளின் வளர்ச்சியை தொடர்ந்து ஊக்குவிப்போம் – எமது எதிர்கால முதலீடு என்பது நம் குழந்தைகளின் முதலீடாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
“இந்த திறமையான மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரிகள் CDCsகளை நடத்துகின்றனர், மேலும் இந்த ஊழியர்களில் 365 அதிகாரிகளும் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள இளைஞர் சமூகம் மற்றும் கல்வி ரீதியாக வளர்ச்சியடைவதை உறுதி செய்வதற்காக சிறுவர் மேம்பாட்டு மதிப்பீடுகளை மேற்கொள்ள பயிற்சி பெற்றவர்கள் என PHDT தெரிவித்துள்ளது.
டிப்ளோமா பயிற்சி வகுப்புக்களை நடத்துவதற்கும், குழந்தைகள் மேம்பாட்டில் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளோமாக்களை வழங்குவதற்கும் PHDTஇல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில், புதிதாக டிப்ளோமா கற்கை நெறியை வைத்திருந்தவர்கள் 672 காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆரம்பகாலத்தில் குழந்தை பருவ மேம்மாட்டுத் திட்டமும் தங்கள் குழந்தைகளின் உணர்ச்சி, சமூக மற்றும் உடல் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கைக் குறித்தது. RCPக்கள், PHDT மூலம் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளை மேலும் பாதுகாக்க பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு திட்டங்களை செயற்படுத்தினர். 57,000க்கும் அதிகமான பெற்றோர்கள் இதுவரை இந்த விழிப்புணர்வு திட்டத்திலிருந்து பயனடைந்துள்ளனர், இந்த விழிப்புணர்வு திட்டத்தில் அறிவு, திறன் மேம்பாடு மற்றும் வீட்டு வன்முறைகளைத் தடுப்பது உள்ளிட்ட ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடதத்தக்கது.
1995இல் தனியார்மயமாக்கல் மற்றும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமை, ஆகியன குழந்தைகளின் மேம்பாட்டு வளர்ச்சியை மேற்கொள்வதற்கான திட்டங்களில் பெருந்தோட்டத்துறை பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஆரம்பத்தில் ‘பிள்ளைமடு’ பாதுகாப்பு வசதிகள் பெருந்தோட்டப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்டன. அதன் பின்னர் RPC’s மற்றும் PHDT ஆகியவற்றின் செல்வாக்கால் சிறுவர் மேம்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டன.
பெருந்தோட்டத் துறையில் குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான குறிக்கோளுடன் CDC’sகளை கட்டமைக்கும் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2015ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு அங்கமாக, RPC’s களின் முதலீடு மற்றும் அயராத முயற்சிகள் புதிதாகக் கட்டப்பட்ட 65 மற்றும் புனரமைக்கப்பட்ட 158 மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தோட்டங்கள் முழுவதிலும் பராமரிப்புக்காக 30,000 குழந்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.