கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி பெருந்தோட்டக் கம்பனிகள் முடிவு!

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, சம்பள நிர்ணய சபையின் கீழ் செயற்பட அனைத்து நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன என்று பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கூட்டு ஒப்பந்தம் அவசியமில்லை, சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூறின. எனவே, கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி, சம்பள நிர்ண சபையின்கீழ் செயற்படுவதற்கு அனைத்து நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன.

பொறுப்பு வாய்ந்த முகாமைத்துவத்தினர் என்ற அடிப்படையில், செய்யக்கூடிய விடயங்களுக்கே தங்களுக்கு இணங்க முடியும். அந்தவகையில் 725 ரூபா, 75 ரூபா என்றவாறு தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. எனினும், இவை அனைத்தும் அவசியமில்லை என்றும், தங்களுக்கு வெறுமனே 1,000 ரூபா வேண்டும் என்றும் எவ்வித அடிப்படையும் இன்றி தொழிற்சங்கங்கள் கூறின.

தற்போது இந்தப் பிரச்சினை தங்களின் கரங்களை மீறி சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளது. அதன் தீர்மானத்திற்கு அமைய செயற்பட வேண்டும். சம்பள நிர்ணய சபை தீரமானம் மேற்கொண்டு, வர்த்தமானியில் அறிவித்தால், அதுவே ஆகக்குறைந்த வேதனமாகும்.” – எனவும் ரொஷான் ராஜதுறை குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles