– (ரா.கமல்)
கேகாலை மாவட்டம் கலகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிந்தெனிய தோட்ட மேல் பிரிவில் நேற்று (17ஆம் திகதி) காலை 9.00மணியளவில் கல்வி, கலை, கலாசார மண்டபமான ‘பிரசாந்தி மண்டபம்’ திறந்து வைக்கப்பட்டது. அவுஸ்ரேலியாவில் உள்ள வன்னி ஹோப் நிறுவனத்தின் பூரண அனுசரனையுடன் வரக்காபொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையின் அமுலாக்கத்தில், மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் ஒழுங்கமைப்பில், பிந்தெனிய சாய் இளைஞர் மன்றத்தினதும் ஆலய பரிபாலான சபையினதும் தோட்ட பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடனும் இந்த கலாசார கட்டிடம் நிறுப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக நேற்று கையளிக்கப்பட்டது.
இதன்போது பிரதம அதிதியாக முன்னாள் இந்து கலாசார அமைச்சரும், கோப்பியோ அமைப்பின் இலங்கைக்கான அமைப்பாளரும் சமூக சேவையாளருமான பி.பி.தேவராஜ் அவர்களும் கோப்பியோ அமைப்பின் உறுப்பினரும் மலையக மாணவர்களின் தரம் ஐந்திற்கான மேம்பாட்டாளருமான பாலசுப்ரமணியம் அவர்களும் கலந்துகொண்டனர். மற்றும் இந்த கட்டிடம் நிறுவப்பட காரணமாக இருந்த வன்னி ஹோப் நிறுவனத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அனுசரனையை பெற்றுத்தந்த மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் தலைவர் முரளிதரன், பேரவையின் தேசிய அமைப்பாளர் ஆர். சந்திரமோகன் போன்றோரும் அவர்களுடன் வரக்காபொல காளிகாம்பாள் ஆலய ஸ்தாபகர், ஆலய பிரதம குரு வணக்கத்துக்குரிய விநாயகமூர்த்தி அவர்கள், பிந்தெனிய தோட்ட முத்துமாரி அம்மன் ஆலய பிரதமகுரு, சித்த ஆய்வாளரும் யோகா ஆசிரியருமான தனசேகர் போன்றோரும் மற்றும் கிராமசேவகர் சந்தமாலி, தோட்ட பொதுமக்கள், இளைஞர்கள், பிந்தெனிய தோட்ட அறநெறி பாடசாலை மாணவர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
கேகாலையில் மிகவும் பின்தள்ளப்பட்ட அடிப்படை வசதிகளற்ற ஒரு தோட்டமான பிந்தெனிய தோட்டத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெற்றமை உண்மையில் பாராட்டதக்க விடயமாகும். நிகழ்வின் முதற்கட்டமாக அதிதிகள வரவேற்கப்பட்டு, தேசிய கொடியேற்றல், நந்திகொடியேற்றல், பின் அதிதிகள் மங்கல விளக்கேற்றல் ஏற்ற பிந்தெனிய ஸ்ரீமுத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை மாணவர்களின் இறை ஆராதனையுடன் நிகழ்வு தொடங்கியது. அடுத்ததாக பிரசாந்தி மண்டபத்தின் ஞாபக கல்லின் திரை சீலையை மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் தலைவரும் தேசிய அமைப்பாளரும் திறந்து வைத்தனர். பின் அதிதிகளின் பங்களிப்புடன் அநறெறி மாணவர்கள் மண்டபத்தினை நாடாவெட்டி திறந்து வைத்தனர்.
நிகழ்வில் தலைமையுரையை ஆற்றிய வரக்காபொல தமிழ் சமூக பேரவையின் தலைவர் விநாயகமுர்த்தி கோமதி அவர்கள் பிரசாந்தி மண்டப திறப்பு விழாவுக்கு சகல விதத்திலும் பங்களிப்பு செய்ய அனைவருக்கு நன்றியை தெவித்தார். குறிப்பாக அவர் மேற்படி தோட்டத்திறகு அறநெறி பாடசாலை ஆரம்பிக்க வந்தபொழுது ஆலயத்திற்கு முன் ஒரு பழைய கட்டிடம் இருப்பதை அவதானித்து இதனை சீர்செய்து ஒரு கலாசார மண்டபம் அமைக்கவேண்டும் என எண்ணியதாகவும் பிறகு மலையகத்தில் கல்வி, சமூக, சமய சேவைகளை ஆற்றிவரும் மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் தொடர்பின் மூலம் அவுஸ்ரேலியாவில் இயங்கும் வன்னி ஹோப் நிறுவனம் மண்டபம் அமைக்க தேவையான நிதியுதவியை வழங்க முன்வந்ததாகவும் அதன்பிறகு கொரோணவின் அசாதாரண சூழ்நிலையிலும் வரக்கொபொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் மற்றும் தோட்டத்தின் சாய் இளைஞர் மன்ற உறுப்பினர்கள், ஆலய பரிபாலன சபையினர், அறநெறி பாடசாலை மாணவர்கள், தோட்ட பொதுமக்கள் அனைவரும் மண்டபம் அமைக்க உதவி நல்கியுள்ளனர் என்றார். இம்மண்டபம் தோட்ட மக்களுக்கு கிடைத்த பெரும் வரபிரசாதமாகும். இதன்மூலம் தோட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்வி அபிவிருத்திற்கு பெரும் பங்களிப்பாக இருக்கும் என்றார்.
அடுத்ததாக மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் தலைவர் முரளிதரன் கருத்து தெரிவிக்கையில்
இந்த கட்டிடத்ததை அமைக்க முன்னின்று உழைத்த வரக்காபொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவைக்கு நன்றியை தெரிவித்தார். அடுத்து வன்னி ஹோப் நிறுவனம் அவுஸ்ரேலியாவில் இயங்குகிறது. இது இலங்கையில் சகல பாகங்களிலும் பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. வன்னி ஹோப் நிறுவனத்தின் பிரதான நோக்கம் கல்வி அபிவிருத்திதான் கல்வி அபிவிருத்தியால்தான் மலையக சமூகமாக இருக்கலாம் வடகிழக்கு சமூகமாக இருக்கலாம் கல்வி அபிவித்தி மூலம் இலக்கை அடையலாம் என்பதனை கருத்தில்கொண்டு பல்வேறு உதவிகளை நல்கி வருகிறது. குறிப்பாக வறுமையில் வாடும் மாணவர்கள் கல்வியில் இடைவிலகாமல் மேலும் அவர்கள் தொடர்ந்து கற்பதற்கான உதவிகளையும் கல்வி மாத்திரம் மன்றி கைத்தொழில் மற்றும் அறநெறி கல்வியை ஊக்குவித்தல் போன்றவற்றிக்கும் உதவிகளை நல்கிவருகிறது. மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்விப்பயிலும் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வருகின்றது. இந்த பிரசாந்தி மண்டபம் அமைக்க நிதி அனுசரணையை தந்துதவிய டாக்டர் மோகனதாஸ் பாலசிங்கம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார். சுமார் 8இலட்சம் பொருள் செலவில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
அத்தோடு வன்னி ஹோப் நிறுவனத்தின நிறைவேற்று பனிப்பாளர் ரஞ்சன் சிவஞான சுந்தரம் அவர்கள் மலையக கல்வி அபிவிருத்தியில் மிகுந்த அக்கரைக்கொண்டவர் அவருக்கு நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.
அடுத்த நிகழ்வாக வரக்காபொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையின் தலைவர் கோமதி அவர்களுக்கு பிந்தெனிய தோட்ட ஆலய பரிபாலன சபையினர், அறநெறி பாடசாலை மாணவர்கள், சாய் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் கோமதி அம்மையாரின் சமூக சேவையை பாராட்டி கௌரவிததனர். அதனைத் தொடர்ந்து வரக்காபொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையால் மலையக சமூக அபிவிருத்தி பேரவை தலைவர் மற்றும் அமைப்பாளருக்கும் பிந்தெனிய சாய் இளைஞர் மன்றத்தினருக்கும் ஆலய பரிபால சபையினருக்கும் வாழ்த்து மடல் அன்பளிப்பு செய்யப்பட்டது.
தொடர்ந்து பிரதம அதிதி உரையில் பி.பி தேவராஜ் அவர்கள் கேகாலை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய ஒரு தோட்டத்தில இவ்வாறான நிகழ்வு சிறப்பாக இடம்பெறுவது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். நாங்கள் கோப்பியோ அமைப்பின் மூலம் கேகாலை மாவட்டத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஆனால் இன்று வரக்க்காபொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவை வரக்காபொலையில் சிங்கள பெரும்பாண்மை சமூகத்திற்கு மத்தியில் சமூக சேவையில் மிகவும் வெற்றியுடன் வீறுநடைபோடுகின்றமை மகிழ்ச்சி. மற்றும் பிந்தெனிய தோட்ட மக்களுக்கு, மாணவர்களுக்கு இலவசமாக நூல்களை அன்பளிப்பு செய்வதாக கூறினார்.
அடுத்து மலையக சமூக பேரவையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆர். சந்திரமோகன் கருத்து தெரிவிக்கையில் தாம் பல்கலைக்கழக கல்வியை தொடர்கின்றபொழுது மலையக சமூகம் முன்னேறுவதற்கு ஏதாவது செற்றிட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என எண்ணியிருந்ததாகவும் 2008ஆம் ஆண்டு மலையக பட்டதாரிகள் ஒன்றியமாக ஆரம்பிக்கப்பட் அமைப்பு பின் 2015ஆம் ஆண்டு மலையக சமூக அபிவிருத்திற்கு பலரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக அதன் பெயரை மலையக சமூக அபிவிருத்தி பேரவை என மாற்றிக்கொண்டதாகவும் இந்த அமைப்பு மலையக சமூகம் குறிப்பாக கல்வி அபிவிருத்தி நோக்கிய நகரவேண்டும் என்றும் அதற்கு தடையாக இருப்பவற்றi இனங்கண்டு அதற்கான தீர்வுகளையும் உதவிகளையும் முன்னெடுப்பதே மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் தார்மீக கடமையாக உள்ளதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் தரத்தை மேலும் ஒருபடி தரப்படுத்த பிந்தெனிய ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய அறநெறி பாடசாலை மாணவர்களினதும் வரக்காபொல காளிகாம்பாள் அறநெறி பாடசாலை மாணவர்களினதும் அரங்கேற்றப்பட்ட நடனம் அனைவரையும் கவர்ந்திருந்தது.
நிகழ்வின் இறுதியில் தோட்ட பொதுமக்காளல் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மலையகத்தில் பல அமைப்புக்கள் செயற்பட்டபோதிலும் இவ்வாறான அமைப்புக்களின் சேவைகள் உண்மையில் பாராட்டத்தக்கது. எங்கு என்ன தேவையோ அங்கு மக்களை தேடிச்சென்று இவ்வாறான உதவிகளை செய்துவரும் அமைப்புக்கள் மேலும் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வாழ்த்துவோமாக.