பலாங்கொடை மற்றும் கல்தொட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலாங்கொடை ரத்மலவின்ன பகுதியில் இருவரும் கல்தொட்ட இலுக்பெலஸ்ஸ பிரதேசத்தில் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 24 கிராம் கேரள கஞ்சா, சட்டவிரோத மதுபானம் மற்றும் அவற்றை தயாரிப்பதற்கு தேவையான பொருட்களும் கைப்பற்றப்பட்டன.கைது செய்த மூவரையும் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையில் படுத்த உள்ளனர்.
எம்.எப்.எம். அலி