மஸ்கெலியா, காட்மோர் பகுதியில் கொங்ரீட் வளையம் சரிந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேநகபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதவான் எஉத்தரவிட்டுள்ளார்.
மஸ்கெலிய – காட்மோரிலுள்ள பாடசாலை வளாகத்திற்குள் அனுமதியின்றி கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த கொங்ரீட் வளையம் சரிந்து 11 வயதான மாணவன் உயிரிழந்ததுடன், சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காட்மோரிலுள்ள பாடசாலையொன்றில் 6 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளார்.
கட்டுமான பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட கொங்ரீட் வளையம் சரிந்ததில் அதற்குள் சிக்கி நேற்று முன்தினம் (04) மாணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.