‘கொரோனா’வால் கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 79 பேர் உயிரிழப்பு’

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் இலங்கையில் நேற்றுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாத்திரம் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். அனைவரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் 22 வரையான சுமார் 8 மாத காலப்பகுதியில் கொரோனாவால் 13 பேரே உயிரிழந்திருந்தனர்.31 ஆம் திகதியாகும்போது மரண எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது.

எனினும் கடந்துள்ள 28 நாட்களில் மாத்திரம் 87 பேர் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் கொரோனா மரணங்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. கொழும்பு மாவட்டத்திலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.  கொரோனாவால் கடந்த மார்ச் முதல் நேற்றுவரை 107 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக வருமாறு,

கொழும்பு – 79
கம்பஹா – 13
களுத்துறை – 06
குருணாகலை – 04
புத்தளம் – 03
நுவரெலியா – 01
இனந்தெரியாதவர் – 01

Related Articles

Latest Articles