கொரோனாவால் பதுளை மாவட்டத்தில் இதுவரை 10 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் பதுளை மாவட்டத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்படி கொரோனாவால் பதுளை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது..

பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த நுகந்தலாவை என்ற பகுதியில் வசித்த 78 வயது நிரம்பிய ஆணொருவரே நேற்று உயிரிழந்துள்ளார்.

வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பயனளிக்காமல் அவர் மரணமானார். இத் தகவலை பதுளைப் பணியக கோவிட் 19 தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles