கொரோனா வைரஸால் நாட்டில் கடந்துள்ள மூன்று நாட்களில் மாத்திரம் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 409 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா முதலாவது அலையின்போது 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர்.இதன்படி கொரோனாவால் இதுவரை மொத்தமாக 409 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் 13 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகின.

