கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 216 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
115 ஆண்களும், 101 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று பதிவான கொரோனா மரணங்களில் 30 வயதுக்கு குறைவான ஐவர் உள்ளடங்குகின்றனர்.