கொரோனாவிலிருந்து மீண்டார் பழ. நெடுமாறன்

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பழ.நெடுமாறன் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கடந்த 11 ஆம் திகதி சளி, காய்ச்சல் அறிகுறியுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் 2 வார கால சிகிச்சைக்கு பிறகு பழ.நெடுமாறன் நேற்று காலை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்.

Related Articles

Latest Articles