‘கொரோனா’வை கட்டுப்படுத்த தேசிய பொறிமுறை அவசியம்!

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தேசிய பொறிமுறையொன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும். அதற்கான ஆதரவு வழங்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறினார்.

” கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பு ஸ்தம்பிதமடைந்நால் பாரிய நெருக்கடி நிலைமை உருவாகும். எனவே, இதனை தேசிய பேரிடராக கருதி, தேசிய பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும்.” – என்றும் அநுரகுமார சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles