இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
பானதுறை வைத்தியசாலையில் கடந்த 31 ஆம் திகதி அனுமதிக்கும்போதே 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதன்பின்னரே வைத்தியசாலைக்கு கொண்டவரப்பட்டுள்ளார்.
மரணத்தின் பின்பு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் அடிப்படையிலேயே கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.










