இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் இன்று (27) உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு வாழைத்தோட்டம், கொம்பனிதெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
19 வயதுடைய இளைஞன் ஒருவரும், 87 வயதுடைய பெண்ணொருவருமே பலியாகியுள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாத்திரம் இதுவரையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
