இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் இன்னும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.