இலங்கையில் நேற்று மாத்திரம் 457 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
மினுவாங்கொட மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கும், தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்களுக்குமே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி இலங்கையில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 870 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 4 ஆயிரத்து 43 பேர் குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்து 808 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 19 பேர் உயிரிழந்துள்ளனர்.