‘கொரோனா’ மேலும் ஏழு பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் நால்வர் 70 வயதைக்கடந்தவர்கள்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து இரண்டு பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 373 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

Related Articles

Latest Articles