கொழும்பில் கொரோனா தாண்டவம்! 22 நாட்களில் 49 பேர் உயிரிழப்பு!!

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று நள்ளிரவுவரை  6 ஆயிரத்து 900 இற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

உயிரிழப்பு சம்பவங்களும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகம் இடம்பெறுகின்றன.  நவம்பர் மாதத்தில் கடந்துள்ள 22 நாட்களில் மாத்திரம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று உயிரிழந்த 4 பேரும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளிய, மோதரை, கிராணட்பாஸ், தெமட்டகொடை உட்பட 13 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு கொழும்பு உட்பட நாட்டில் வாழும் மக்களிடம் சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Articles

Latest Articles