கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் இரணை தீவில் அடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்திற்கு எதிராக, கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணைதீவு மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அருட்தந்தையர்கள், இரணைதீவு பொதுமக்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஆகியோர் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இரணைதீவில் இடமளிக்க முடியாது எனவும், அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்க்கின்றோம் எனவும் மக்கள் தெரிவித்தனர்.










