மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் 7 பிரவுகளில் வாழும் பெருந்தோட்ட மக்கள், அரசுக்கு எதிராக இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.
சாமிமலை, மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள கவரவில்லை சந்தியில் வைத்தே அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
எரிபொருள் நெருக்கடி, தொடர் மின்வெட்டு மற்றும் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் , அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுமே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
