கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் நுவரெலியா, பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் லொறியொன்று இன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
குளியாப்பிட்டியவில் இருந்து நுவரெலியாவுக்கு கோழி உரத்தை ஏற்றிவந்த லொறியே வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பிரதான வீதியில் உள்ள வளைவு ஒன்றில், தடுப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு பள்ளத்தில் இருந்த தேயிலை தோட்டத்தில் விழுந்துள்ளது.
சாரதியுடன் இரு உதவியாளர்கள் லொறியில் இருந்துள்ளனர். எனினும் அதிஸ்ட வசமாக சிறு காயங்களுடன் மூவரும் உயிர் தப்பியுள்ளனர்.
இப்பகுதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு, அப்பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை, பல வீதித்தடைகளை அமைத்துள்ளது.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நானுஓயா நிருபர்