ஜனாதிபதி தேர்தலின்போது எந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பில் கட்சி இன்னும் இறுதியான – உறுதியான முடிவை எடுக்கவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அந்த அணியுடன் பயணிக்கவே எதிர்பார்க்கின்றோம். தற்போதைய சூழ்நிலையில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவிலேயே இருக்கின்றோம். எனினும், கட்சி மாற்று முடிவை எடுத்தால் அது பற்றியும் பரிசிலீக்க வேண்டிவரும்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதியின் ரணிலின் சகாக்கள் அறிவிப்புகளை விடுத்திருந்தாலும், ரணில் விக்கிரமசிங்க இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அந்த அறிவிப்பை ரணில் விக்கிரமசிங்க விடுக்கும்வரை நம்ப முடியாது.
தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் என்ற அதிக நம்பிக்கை உள்ளது.” -என்றார்