சஜித்துக்கும் வழங்கும் வாக்கு அநுரவுக்கான ஒட்சீசன்!

தலைவர் என்பவர் எந்த ஒரு அணியுடன் இணைந்து செயற்படக் கூடியவர் என்றும் பதவியின் பொறுப்பு பற்றி கதைக்காமல் அணி பற்றி கதைக்கும் சஜித் ஒரு பொறுப்பற்ற நபர் என்பது உறுதியாகின்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடு இன்னல்களுக்கு முகம் கொடுத்த போது நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைந்த குழுவுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு வந்ததாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த பொதுத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படும் அணியுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் வலியுறுத்தினார்.

எதிர்கட்சித் தலைவராக சஜித் செய்தது அநுரகுமாரவை பலப்படுத்தியது எனவும் அதனால் தான் மக்கள் தற்போது ஐ.ம.சக்தி AKD யின் ஆக்சிஜன் என அழைக்கின்றனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மத்துகம தனியார் பேருந்து நிலையத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் அவர்கள் ஜனாதிபதியை மிகவும் அன்புடன் வரவேற்றனர்.

இதன்போது ‘ஐந்து அம்ச’ இளைஞர் பிரேரணை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டது.

தருஷி அனுத்தரா எதிரிமான்னவினால் ஜனாதிபதிக்காக இயற்றப்பட்ட பாடல் ஒன்றும் இங்கு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட புளூ பிரிண்ட் கொள்கை அறிக்கையில் ‘பாதுகாப்புச் செலவினங்களை மறுபரிசீலனை செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்’ என்ற தலைப்பிலான பிரேரணை குறித்தும் குறிப்பிட்ட ஜனாதிபதி, பாதுகாப்புச் செலவினங்களைக் குறைத்தல் என்பதன் மூலம் என்ன கருதப்படுகின்றது என்பதன் உண்மைகளை அவர்கள் உடனடியாக நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“இரண்டு வருடங்களுக்கு முன்பு தேர்தலை நடத்தும் நிலை இருக்கவில்லை. பொருளாதாரத்தை நிலைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கவில்லை. ஆனால் நாங்கள் அதனை செய்து காட்டினோம். இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலையான தன்மையை பாதுகாக்கவே தேர்தலை நடத்தி மக்கள் ஆணையைக் கோருகிறோம்.

நாட்டை மீட்டெடுத்த பயணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல இன்னும் இரண்டும் மூன்று வருடங்கள் தேவைப்படும். நான் ஏற்றுக்கொண்டபோது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி சரிவடைந்திருந்தது. மறுமுனையில் ரூபாயின் பெறுமதியும் கடுமையாக சரிந்தது. பணவீக்கம் தலையெடுத்தது. வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. உரம் இருக்கவும் இல்லை. எதிர்பார்ப்புக்கள் அற்றுப்போன தருணத்திலேயே அந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க என்னால் முடிந்தது.

உற்பத்தி, தொழில், சுற்றுலா, வைத்திய, அரச துறைகள் என அனைத்தும் இன்று சுமூகமாக செயற்படுகின்றன. நான் தனியொரு எம்.பியாகவே நாட்டை ஏற்றேன். எனக்கு பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் ஆதரவளித்தனர். மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இன்னும் சில ஆண்டுகள் வேண்டும். எனது எதிர்காலத்துக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிட்டது. ஜனாதிபதி பதவியையும் பார்த்துவிட்டேன்.

அதனால் இனி உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானியுங்கள். நாம் தொடர்ந்தும் இறக்குமதிப் பொருளாதாரத்தின் மீது தங்கியிருக்க முடியாது. ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனை செய்யாவிட்டால் நாம் மீண்டும் நெருக்கடிக்குள் விழுவோம். நாம் முன்னோக்கிச் செல்ல பொருளாதார மாற்றமொன்று அவசியம்.

அதற்காகவே இயலும் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை ஐந்து முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு முன்வைத்துள்ளேன். இன்று பல பொருட்கள் விலை குறைந்துள்ளன. அடுத்த சில வருடங்களில் மக்களின் சுமைகளை முற்றாக குறைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

எனவே ரூபாயின் பெறுமதியை பலப்படுத்தி அதனைச் செய்வோம். சிலர் வரியைக் குறைப்பதாகச் சொல்கிறார்கள். கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்தபோது வரிக் குறைப்புச் செய்ததாலேயே அவரின் ஆட்சி சரிவைக் கண்டது.

அந்த நிலை மீண்டும் வரக்கூடாது என்பதாலேயே நாம் கடன் வாங்குவதையும், பணம் அச்சிடுவதையும் நிறுத்தியுள்ளோம். கதிர்காமத் திருவிழாவில் நெருப்புக்கு மத்தியில் நடப்பதைப் போன்று எமது நிலை உள்ளது. அந்தப் பயணத்தை ஓரளவு கடந்துவிட்டோம். இனிவரும் காலங்களில் உற்பத்தியை அதிகப்படுத்தி, தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியுள்ளது. அதேபோல் வரிச் சுமையை குறைத்து, நிவாரணத் திட்டங்களையும் பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரித்தால் வரிச் சுமையைக் குறைக்க முடியும். எவ்வாறாயினும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்வது மிக முக்கியமானதாகும். மத்துகம போன்ற பகுதிகளில் ஏற்றுமதியை இலக்கு வைத்து உலக உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம்.

முதற்கட்டமாக உலர் வலயங்களில் நெல் விளைச்சலை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். அதனால் புதிய தொழில்களும், வருமான வழிகளும் உருவாகும். மறுமுனையில் இன்று பங்குச் சந்தையும் வலுவாகச் செயற்படுகிறது. பரிமாற்ற அடிப்படையில் செயற்படுத்தக்கூடிய நவீன விவசாயச் சந்தை முறைமைகளை அறிமுகப்படுத்துவோம்.

மத்துகம போன்ற பகுதிகளில் கறுவா உற்பத்தியைப் பலப்படுத்தலாம். முந்தைய காலத்தில் இறப்பர் உற்பத்தியும் இங்கு காணப்பட்டது. அடுத்தபடியாக சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் ஊக்குவிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 400 டொலர் ஈட்டும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மத்துகமவில் சுற்றுலா மையம் ஒன்றை அமைப்பதோடு, முதலீட்டு வலயம் ஒன்றையும் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான பொறிமுறை இயலும் ஸ்ரீலங்கா விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்துகம இளையோர் என்னிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றை ஏற்றுக்கொண்டு செயற்படுத்துவேன். இங்கு கல்வி அபிவிருத்தியை மேம்படுத்துவோம். தொழில்கல்வி மையம் ஒன்றை அமைத்து தருவோம். கடந்த நான்கு வருடங்களில் தொழில் வழங்க முடியாமல் போனதால் அடுத்த வருடம் ஒரு இலட்சம் பேருக்கு தொழில் பயிற்சிகளையும் தொழில்களையும் பெற்றுத் தருவோம்.

அதேபோல் உறுமய திட்டமும் உங்களுக்கு உரிமைகளைத் தருவதற்காவே உருவாக்கப்பட்டது. மேலும் இதுவரையில் நாட்டை ஆண்ட ஜனாதிபதிகள் எவரும் தனக்கு மற்றையவர்கள் உதவி செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் செயற்படவில்லை. ஜனாதிபதி என்பவர் தனியாக செயலாற்றும் வல்லமை கொண்டவராக இருக்க வேண்டியது அவசியம்.

சஜித்துக்கு நன்றாக ஆங்கிலம் பேச தெரிகிறது. வில்லியம் சேக்ஸ்பியரும் அவரின் ஆங்கில வகுப்புகளுக்கு வருகிறார் என்று அறிந்தேன். இவ்வாறான வேடிக்கைகளை விடுத்து ஜனாதிபதியுடன் இருக்கும் அணியில் யார் இருக்கிறார் என்பதை பார்க்காமல் ஜனாதிபதியாக சிறந்தவர் எனில் அவருக்கு வாக்களியுங்கள்.

பாராளுமன்ற தேர்தலில் பிரதமரையும் அவரோடு வரப்போகும் அணியையும் தெரிவு செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பாகும். இம்முறை எனக்கு ஆதரவளித்த அணியினர் நன்றாக பணிகளை செய்தனர். அதனை மறுக்க முடியாது. அவர்கள் எவரையும் நான் தெரிவு செய்யவில்லை. எந்தவொரு அணியைத் தந்தாலும் அவர்களுடன் பணியாற்றும் இயலுமை எனக்கு உள்ளது.

தலைவர் என்றால் எந்த அணியுடனும் வேலை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். இன்று ஐக்கிய மக்கள் சக்திக்குள் இரண்டு பொருளாதார குழுக்கள் இருக்கின்றன. ஒரு குழுவில் ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹசீம், எரான் விக்ரமரத்ன போன்ற எம்.பிக்கள் உள்ளனர். மற்றைய அணியில் நாலக கொடஹேவாவும், ஜீ.எல். பீரிஸூம் உள்ளனர். ஒரு குழுவின் பொருளாதார திட்டங்களில் குறிப்பிடப்படுகின்ற விடயங்கள் மறு குழுவின் திட்டங்களில் நிராகரிக்கப்படுகின்றன. அதனால் இந்த இரு குழுக்களுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதே தெரிகிறது.

அதனால் சஜித் அணியினர் இரண்டு பொருளாதார முறைமைகள் பற்றி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டனர். அவை இரண்டும் பூட்டான் போன்ற வறிய நாடுகளில் பின்பற்றப்படும் கொள்கையாகும். அந்த நாடுகளின் நிலைக்கு இலங்கை செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மேலும், சில இடங்களில் சுற்றுலா அபிவிருத்தி, பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைப்பது தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் எவ்வித தௌிவுபடுத்தல்களும் இல்லை.

மேலும், இதுவரையான ஜனாதிபதி தேர்தல்களில் இரண்டு தலைவர்களே போட்டியிட்டனர். ஆனால் இன்று தனக்கு பின்னால் இருந்த ஜே.வி.பி மேலெழுந்து வருவதற்கான வழியை சஜித் உருவாக்கியுள்ளார். அதனால் இன்று சஜித் அனுரவை வெல்ல முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

எனவே ஐக்கிய தேசிய கட்சியை இன்று நானே பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். சஜித்துக்கு அளிக்கும் வாக்குகள் ஜே.வி.பிக்கு வழங்கப்படும் ஒட்சிசன் என்பதை ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதனால் செப்டம்பர் 21 சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இல்லை, தொழில் வாய்ப்பும் பிறக்காது” என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles