சஜித்தை பிரதமராக்குவோம் – மொட்டு கட்சி தவிசாளர் அறிவிப்பு

“ஜனாதிபதிக்கான தேர்தலில் டலஸ் அழகப்பெரும வெற்றிபெற்றால், சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்படுவார். இதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முழு ஆதரவையும் வழங்கும்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மொட்டு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் டலசுக்கே ஆதரவு வழங்குவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles