சஜித் அணியின் ஆட்டம் ஜனவரியில் ஆரம்பம்! 19 ஆம் திகதி வியூகம் வகுப்பு!!

ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி பண்டாரவளையில் நடைபெறவுள்ளது.

கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்திக்கான யாப்புக்கு அங்கீகாரம் பெறப்படவுள்ளது. அதன்பின்னர் கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பமாகும்.

Related Articles

Latest Articles