சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் நடுவர்களாக இலங்கையிலிருந்து ஆறுபேர் தெரிவு

சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின் பிபா நடுவராக கல்முனையை சேர்ந்த ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தினால் -பிபா ஒவ்வொரு வருடமும் நடுவருக்கான தெரிவு இடம்பெறும். இதற்கமைய 2021 ஆண்டுக்கான சர்வதேச நடுவர்களுக்கான (FIFA International Referees ) பெயர் பட்டியலில் இலங்கையிலிருந்து ஆதம்பாவா முஹம்மட் ஜப்ரான் உட்பட ஆறு பேர் பிரதான நடுவராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

கல்முனையை சேர்ந்த ஆதம்பாவா முஹம்மட் ஜப்ரான் , சர்வதேச நடுவராக தெரிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் நாட்டிற்க்கும் அம்பாறை மாவட்டத்திற்க்கும் பெருமை சேர்த்துள்ளார்.

சிறு வயது முதல் கால்பந்தாட்ட துறையில் ஆர்வம் கொண்ட இவர் தாம் இத் துறையில் நடுவராக வர வேண்டுமென விரும்பியதாகவும் அயராத கடின முயற்சி மூலம் தாம் இவ் இலக்கை அடைந்ததாகவும் ஆதம்பாவா முஹம்மட் ஜப்ரான் தெரிவித்தார்.

கால்பந்தாட்ட போட்டிகளில் தேசிய ரீதியில் பல திறமைகளை வெளிக்காட்டியதுடன் இவர் பல தேசிய ரீதியிலான மற்றும் உள்ளூர் உதைப்பந்தாட்ட போட்களில் பிரதான நடுவராக கடமையாற்றியுள்ளார்.

தனது 16வது வயதில் 2010 ம் ஆண்டு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் FFSL Grade -lll இடம்பெற்ற பரீட்சையில் சித்தியடைந்து நடுவராக தனது மத்தியஸ்துவ பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் 2012 ல் FFSL Grade – ll REFEREE யாகவும் 2017ல் FFSL Grade – l REFEREE யாக சித்தியடைந்து தரமுயர்த்தப்பட்டார்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சுற்றுப்போட்டிகளில் மிகத் திறமையாக மத்தியஸ்துவம் செய்து FFSL NATIONAL ELITE REFEREE யாக உயர்ந்து இலங்கை முழுவதும் பிரபல்யமடைந்தார். குறிப்பாக 2020 FFSL Champion League அரை இறுதிப் போட்டியில் REFEREE யாக மிகத் திறமையாக கடமையாற்றி அனைவரினதும் பாராட்டுகளைப் பெற்றார்.

ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் AFC REFEREE ACADEMY யில் இலங்கை சார்பாக தெரிவு செய்யப்பட்டு மலேசியாவில் வருடத்திற்கு மூன்று தடவைகள் என்று REFEREE COURSE யினை இரண்டு வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றார் அத்துடன் இவர் FIFA வினால் நடாத்தப்பட்ட FIFA REFEREEING MA COURSE யில் மூன்று தடவைகள் பங்குபற்றியுள்ளார்.

இவர் மாலைதீவு Champion. League போட்டிக்கு மத்தியஸ்துவம் செய்ய இரண்டு தடவைகள் மாலைதீவுக்கு சென்று சர்வதேச ரீதியாகவும் தடம் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவர் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் உப செயலாளராகவும் உள்ளார். மேலும் இவர் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் விளையாட்டு ஆசிரியராக கடமையாற்றும் இவர் இப் பாடசாலையின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கல்முனையை சேர்ந்த யூ. எல்.ஆதம்பாவா மற்றும் செயின் ஜெஸ்மின் ஆகியோரின் புதல்வராவார்.

மேலும் கடுமையான முயற்சியுடன் இந்த இலக்கை அடைந்ததாக நெகிழ்சியுடன் தெரிவித்தார் ஜப்ரான். தனது 26வயதில் சர்வதேச நடுவராக தெரிவு பெற்றது என்பது கால்பந்தாட்ட துறையில் முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் இளைஞர்கள் மத்தியில் முன்னுதாரணமாகும் .

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து முதன்முறையாக பிபா நடுவராக இவர் தெரிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது

அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles