” சாரதியொருவர்மீது தாக்குதல் நடத்தும் பொலிஸ் அதிகாரியின் செயலை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. “- என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது.
போக்குவரத்து பொலிஸ் அதிகாரியால் சாரதியொருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அரசின் நிலைப்பாடு என்னவென்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
” சொல்லில் அல்ல தனது நிலைப்பாடு என்னவென்பதை அரசாங்கம் செயல் ஊடாக காட்டியுள்ளது. பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுப்பார்.” – என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.