இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு (PCCSL) ஆகியவற்றில் பணியாற்றிய ஊடகவியலாளர் கமல் லியனாராச்சி இன்று காலமானார்.
அவர் ‘யுக்திய’ மற்றும் ‘லக்பிம’ பத்திரிகைகளில் ஊடகவியலாளராக பணியாற்றியுள்ளார். இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு மலையக குருவி ஊடக குழுமத்தின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
