மோசடிகள், கொள்ளை மற்றும் வன்முறைகளில் ஈடுபடாத நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற இளைய தலைவர் ஒருவரை உருவாக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய இளைய தலைவர் ஒருவரை உருவாக்கப்போவதாகவும் அவர் தமது குடும்பத்திலிருந்து வரவேண்டும் என்ற அவசியம் கிடையாது என்றும் தெரிவித்துள்ள அவர், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அத்தனகல்ல பிரதேசத்தில் சிறந்த கல்வி அறிவு கொண்ட தேவையான அளவு இளைஞர்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
‘எமக்கு நாட்டை நிர்வகிக்கும் வகையில் வயது கிடையாது. நாம் வயது முதிர்ந்தவர்களாகிவிட்டோம்’ என்றும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
