மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினர் இதுவரை 145 இற்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள், சிறைக் கைதிகள் , சிறைச்சாலை அதிகாரிகள்ஆகியோரிடமே இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 11 கைதிகளில் இதுவரை 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை, மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.நீதி அமைச்சர் அலிசப்ரியால் குறித்த அறிக்கை முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.