நாட்டில் பல பாகங்களில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இடையிடையே மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய ஆகிய மாகாணங்களில் ஒரு சில இடங்களில் 100 மி.மீ. அதிக மழைவீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் நாட்டில் 6 மாவட்டங்களில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 470 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
அதேவேளை, கொழும்பு , காலி, களுத்துறை, மாத்தறை, மாத்தளை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.










